Thursday, 22 August 2013

பற்று

பற்றற்ற வாழ்க்கையை இப்போது 
பற்றி கொள்ள 
பற்று வந்து விட்டது....
பற்றே போய்விடு...என்னைப்
பற்றாமல் போய்விடு...
பற்று பற்று என 
என் இருவிதழ்களை
பற்றி பற்றி..
பற்ற வைத்து பார்க்கிறது-இந்த 
பற்றில்லா பற்று...
பற்றில்லாமல் போனாலும்
புற்று கட்டிவிடுமே என 
புத்தன் கூட
புற்றின் மேல்
பற்று கொண்டதால்...
பற்றில்லாமல் இருக்க 
கற்று கொள்ள வயது
பற்றாமல் அல்லவா இருக்கிறது,,....

No comments:

Post a Comment