காலம்...
கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவே
கண்ணுக்கு தெரியாத மாய ஈர்ப்பு...
காலம்..
வெகு வேகமாக சுழன்றும் கூட
தன் பாதையை விட்டு அகலாமல்
பூமியை களமாக கொண்டு நடத்தப்படும் நாடகத்தின் மணித்துளி....
காலம்..
அதி வேக ரயில் விண்கல வேகத்தில் செல்லும்போதும்
தன் தண்டவாளத்தை விட்டு அகலாமல் ஆனால்
தன் தண்டவாளத்தையும் தொடாமல் தள்ளி நின்று பயணிப்பது போல.....
காந்த ஈர்ப்பு கொண்டது...
காலம்...
கல்லுரி நினைவுகளுக்கு
கண்ணீரை நதியாக்கி
அதில் நீராட வைக்கும்...
காலம்..
கடந்து போன காதலுக்கு அவ்வப்போது
கண் வைத்து காது வைத்து
முகம் வரைந்து
முத்தம் கொடுத்து
ஒத்திகையும் பார்க்கும்...
காலம்...
உடைத்து போன உறவுகளை
ஒட்ட வைக்க எதாவது கிடைக்குமா என
அசை போட வைக்கும்..
காலம்...
நினைவுகளின் ஆழத்தை கடக்க
உணர்வு போட்ட
பௌதீக பாலம்...
-----நோவா-------
No comments:
Post a Comment