Friday, 20 May 2011

நீ...நான்..நிலா...

ஒரு வீட்டின் திண்ணையில்
ஒரு தாய் குழந்தைக்கு
என்னை காட்டி சோறு ஊட்டுகிறாள்..
கடற்கரையில் ஒரு காதல் ஜோடி
தம் உறவில் என்னையும் சேர்த்து கொள்கிறார்கள்..
என்னை பார்த்து
நரியும் கூட ஊளை இடுகிறது...
பேயும் பிசாசும் ஆவியும்
என் முழு தரிசனத்தை
எதிர்பார்த்து காத்திருக்கின்றன...
ஆனால் இந்த பாழாய் போன மேகம் மட்டும்
என்னை வர விடாமல் தடுக்கிறது....
நான்...
என் ஒளியால்...
மேகமே உன்னை விரட்டுவேன்..
இனி என்னிடம் வராதே..
 .....நோவா....

No comments:

Post a Comment