Friday, 20 May 2011

ஒரு கண தாய்

இன்று...
எனக்குள் ஒரு சிலிர்ப்பு...
இனம்புரியாத சின்ன அதிர்வு...
எதோ ஒன்று
என்னுள் படர்வதை
உணரும் வாய்ப்பு...
மெல்ல திரும்பி பார்த்தேன்...

ஒரு மழலையின் கை விரல்கள்
என் தோளிலே...
புரியாத ஓவியம் ஒன்றை
கோலங்கலாக்கி  கொண்டிருந்தது..

பார்த்து சிரித்தேன்..
அதுவும் கண்களை
சிமிட்டி சிரித்தது...
பிள்ளை பெறாமலேயே
தாயானது என மனம்...
ஒரு கணம்..

கண்களை மூடி
கடவுளுக்கு நன்றி சொன்னேன்
இவ்வுலகில் என்னை பெண்ணாக்கி
இந்த அனுபவத்தை தந்ததற்கு...

No comments:

Post a Comment