கால்வாயை தாண்டி
குடுவை நிறை பாலுடன்
ஒரு ரப்பர் மரம்..
கால்வாய் ஒரு தாவலில் முடியும் அகலம்
காலிரண்டையும் அகல விரித்து தாண்டினேன்
பெருவிரல் கரை சேராமல்
நான் கால்வாய்க்குள் விழ...
பால் என் கைவிரல் பட்ட அதிர்ச்சியில் என் மேலே விழ
ரப்பர் மரம் என்னை வெறித்து நோக்கியது...
.....
கதவு திறக்க பட
ஓர் ஆள் வெளியே
ஓர் ஆள் உள்ளே...
மாறி மாறி போக வர
கதவு முன்னும் பின்னுமாய் அசைய
நானும் அதை அணுக முயல்கிறேன்...
கரத்துக்கும் கதவுக்கும் சிறு இடைவெளி தான்
வேறொரு கை என்னை முந்தி செல்ல.. .
கதவு என் ஸ்பரிசத்தை நோக்குகிறது கை படாமல்..
......
முன்னே ஜனம் இருக்க..
பின்னே நானிருக்க...
கண் முன்னே உணவிருக்க...
அணுகினேன்...
விற்பவள் வெறுங்கையை காட்டினாள்....
என் கையிலிருந்த நோட்டு நமட்டு சிரிப்புடன்
காற்றில் அசைந்தது...அவள் கரம் சேராமல்..
.....
நாடுவோர் இன்றி நட்ட நடு ரோட்டில்
ஒரு ஒட்டு கடை...
ஓடி போய் வாங்கினேன்
குச்சி மிட்டாய்...
என் வாய்க்குள்ளே சுழல சுழல
நூலிழையில்
விட்டு போன என் சந்தர்ப்பம்
ஒட்டு மொத்தமாய்
என் நா நுனியில்...
(நோவா)
No comments:
Post a Comment